• May 05 2024

ஏப்ரல் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல்...! தயாராகும் தேர்தல் களம்...!samugammedia

Sharmi / Dec 18th 2023, 8:25 am
image

Advertisement

நாட்டின் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறுவதாக தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி இறுதி தீர்மானம் எடுத்தால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு (ஏப்ரல்) முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்தியவசியப் பொருட்களின் விலை மீண்டும் ஒருமுறை உயர்வடைந்துள்ளமையும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த 20 பேர் கொண்ட குழு இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளமையும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் என்பதால், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பபடும் என மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல். தயாராகும் தேர்தல் களம்.samugammedia நாட்டின் தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என ஆளும் கட்சி வட்டாரங்கள் கூறுவதாக தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் ஜனாதிபதி இறுதி தீர்மானம் எடுத்தால் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு (ஏப்ரல்) முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.அத்தியவசியப் பொருட்களின் விலை மீண்டும் ஒருமுறை உயர்வடைந்துள்ளமையும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த 20 பேர் கொண்ட குழு இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளமையும் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே, அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் என்பதால், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பபடும் என மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement