2015-2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுத்த கருத்திட்டங்களை மீண்டும் செயற்படுத்துவோம் கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் ஆணையை எமக்கு வழங்குங்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய குடியரசு முன்னணியின் வேட்பாளர்கள் நேற்று மத வழிபாடுகளுடன் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தனர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் முன்னெடுத்த பணிகள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டுடன் இடைநிறுத்தப்பட்டன.
குறிப்பாக கொழும்பு நகரின் கழிவகற்றல், திண்மக்கழிவகற்றல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டோம்.
கொழும்பு நகரில் வாழ்பவர்களில் 70 சதவீதமானோர் குறைவான வருமானத்தை பெறும் தரப்பினர்களாவார். இவர்கள் ஏழைகள்.
இவர்களில் ஒரு பகுதியினருக்கு தொடர்மாடி குடியிறுப்புக்களை வழங்கினோம். மிகுதியாகவுள்ளவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.
கொழும்பினை அழகுப்படுத்துவோம். கொழும்பில் எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொள்ளாதவர்கள் இன்றும் வாய்ச்சொல் வீரர்களாக பொய்யுரைக்கிறார்கள். கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் ஆணையை எமக்கு வழங்குங்கள் என்றார்.
கொழும்பை அபிவிருத்தி செய்யும் ஆணையை எமக்கு தாருங்கள் - சம்பிக்க பகிரங்க கோரிக்கை 2015-2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக முன்னெடுத்த கருத்திட்டங்களை மீண்டும் செயற்படுத்துவோம் கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் ஆணையை எமக்கு வழங்குங்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய குடியரசு முன்னணியின் வேட்பாளர்கள் நேற்று மத வழிபாடுகளுடன் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.கொழும்பு நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் முன்னெடுத்த பணிகள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டுடன் இடைநிறுத்தப்பட்டன. குறிப்பாக கொழும்பு நகரின் கழிவகற்றல், திண்மக்கழிவகற்றல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டோம்.கொழும்பு நகரில் வாழ்பவர்களில் 70 சதவீதமானோர் குறைவான வருமானத்தை பெறும் தரப்பினர்களாவார். இவர்கள் ஏழைகள். இவர்களில் ஒரு பகுதியினருக்கு தொடர்மாடி குடியிறுப்புக்களை வழங்கினோம். மிகுதியாகவுள்ளவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.கொழும்பினை அழகுப்படுத்துவோம். கொழும்பில் எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொள்ளாதவர்கள் இன்றும் வாய்ச்சொல் வீரர்களாக பொய்யுரைக்கிறார்கள். கொழும்பு நகரை அபிவிருத்தி செய்யும் ஆணையை எமக்கு வழங்குங்கள் என்றார்.