• Apr 28 2024

நிறைவேற்றதிகார பிரதமர் ஆட்சிக்கு அரசாங்கம் சூழ்ச்சி..! எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Chithra / Feb 27th 2024, 9:18 am
image

Advertisement

 

நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் திட்டமாகும், அதற்கு ஒருபோதும் ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

இதேவேளை சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த முற்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்தகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

 இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதிபர் தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளன. தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்பதை அரசாங்கத்துக்கு கூறிக் கொள்கின்றோம்.

அதிபர்  முறைமையை நீக்குதல் என்று பாரிய பதாதையை காட்சிப்படுத்திக் கொண்டிருப்பதே தற்போது அரசாங்கம் பின்பற்றும் தந்திரமாகும். 

இந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றி அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதே அரசாங்கத்தின் திட்டமாகும்.

இந்த தந்திரத்தின் ஊடாக மேலும் ஒரு வருடத்துக்கு தேர்தலைக் காலம் தாழ்த்துவதே அரசாங்கத்தின் சூழ்ச்சியாகும். அதற்கமைய இவ்வருடம் செப்டெம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் வரை நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே இவர்களின் திட்டமாகும்.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பின்கதவால் ஓடிய போதே நிறைவேற்றதிகார அதிபர் முறைமை சூனியமாகிவிட்டது. எனவே இதனைக் கொண்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் எதையும் சாதிக்க முடியாது.

நிறைவேற்றதிகார அதிபர் முறைமையை நிறைவேற்றதிகார பிரதமர் முறைமையாக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்“ என தெரிவித்தார்.

நிறைவேற்றதிகார பிரதமர் ஆட்சிக்கு அரசாங்கம் சூழ்ச்சி. எதிர்க்கட்சி குற்றச்சாட்டு  நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் திட்டமாகும், அதற்கு ஒருபோதும் ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.இதேவேளை சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த முற்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்தகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதிபர் தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளன. தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்பதை அரசாங்கத்துக்கு கூறிக் கொள்கின்றோம்.அதிபர்  முறைமையை நீக்குதல் என்று பாரிய பதாதையை காட்சிப்படுத்திக் கொண்டிருப்பதே தற்போது அரசாங்கம் பின்பற்றும் தந்திரமாகும். இந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றி அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதே அரசாங்கத்தின் திட்டமாகும்.இந்த தந்திரத்தின் ஊடாக மேலும் ஒரு வருடத்துக்கு தேர்தலைக் காலம் தாழ்த்துவதே அரசாங்கத்தின் சூழ்ச்சியாகும். அதற்கமைய இவ்வருடம் செப்டெம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் வரை நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே இவர்களின் திட்டமாகும்.முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பின்கதவால் ஓடிய போதே நிறைவேற்றதிகார அதிபர் முறைமை சூனியமாகிவிட்டது. எனவே இதனைக் கொண்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் எதையும் சாதிக்க முடியாது.நிறைவேற்றதிகார அதிபர் முறைமையை நிறைவேற்றதிகார பிரதமர் முறைமையாக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்“ என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement