அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்புக்களை வழங்கு என அரசாங்கத்தை வழியுறுத்தி கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஆரம்பித்துள்ள சுழற்சிமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டம் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னாள் இன்று (02) ஆரம்பமானது.
இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் அதிகளவான வேலையில்லா பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது பட்டம் முடித்து பல வருடங்களாகியும் இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படாமையினால் தாம் வேலையில்லாமல் காணப்படுவதாகவும், இது குடும்பத்திற்கு பெரும் சுமையாக இருப்பதாகவும் வேலையில்லா பட்டதாரிகள் தெரிவித்தனர்.
ஏனைய மாகாணங்களில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவது போன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் புறக்கணிக்கப்படாமல் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கிழக்கு மாகாண பட்டதாரிகளின் சுழற்சி முறையிலான போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
'பட்டம் பெற்ற பட்டதாரிகள் பட்டமரமாய் வீதியிலே' திருமலையில் வேலையில்லா பட்டதாரிகள் ஆதங்கம். அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்புக்களை வழங்கு என அரசாங்கத்தை வழியுறுத்தி கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஆரம்பித்துள்ள சுழற்சிமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டம் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னாள் இன்று (02) ஆரம்பமானது.இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் அதிகளவான வேலையில்லா பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.இதன்போது பட்டம் முடித்து பல வருடங்களாகியும் இன்னும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படாமையினால் தாம் வேலையில்லாமல் காணப்படுவதாகவும், இது குடும்பத்திற்கு பெரும் சுமையாக இருப்பதாகவும் வேலையில்லா பட்டதாரிகள் தெரிவித்தனர்.ஏனைய மாகாணங்களில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவது போன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள பட்டதாரிகள் புறக்கணிக்கப்படாமல் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண பட்டதாரிகள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் கிழக்கு மாகாண பட்டதாரிகளின் சுழற்சி முறையிலான போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.