உள்ளூர் இழுவைமடி மற்றும் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் ரோலர்களால் தொடர்ந்தும் வடக்கு மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று தனது இல்லத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
மன்னார் மாவட்டத்தில் சகல தடை செய்யப்பட்ட கடற்றொழில்களும் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற போதும் யாழ்ப்பாணத்தில் நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்துவதில்லை.
இந்தியன் இழுவைமடி படகுகள் மீன் உற்பத்தி இடங்களை அழித்து நாசம் செய்கின்றபோதும் அதைவிட அதிகமாக தற்போது உள்ளூர் இழுவைமடி படகுகள் மீன் உற்பத்தி இடங்களை அழித்து மீன் உறப்பத்தியை இல்லாமல் செய்கின்றன.
தற்போதும் வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கடல் பகுதிகளில் சட்டவிரோத சுருக்குவலை தொழில், டைனமெட் மீன்பிடி, மற்றும் பிற மாவட்ட மீனவர்களின் வாடி அமைத்து கடல் அட்டை பிடிக்கும் தொழில்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள், அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தெரிவித்தார்.
இதனால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக்கவும், தற்போது மீனவர்கள் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், ஒரு நாளைக்கு ஒரு மீனவனுக்கு 30 லீட்டர் தொடக்கம் 50 லீட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுவதாகவும், ஆனால் ஒரு கிழமைக்கு 20 லிட்டர் மண்ணெண்ணெயை கூட பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறு மீனை பிடித்து கரைக்கு வந்தால் தற்போதைய எரிபொருள் முறைமை காரணமாக கொழும்புக்கு மீன் கொண்டு செல்லும் குளிரூட்டி வாகனங்களுக்கான எரிபொருள் பற்றாகுறையால் குளிரூட்டிகளில் மீன் கொண்டு செல்லாமையால் விற்பனை செய்ய முடியாதுள்ளது.
மீனவர்களது பிரச்சனைகளை உரியவர்கள் கவனமெடுத்து அவர்களது வாழ்வாதாரம் மேம்பட உதவுமாறும் கோரிக்கை விடுத்தார்.
மண்ணெண்ணெய் இல்லாததால் பெரும் நெருக்கடி; அன்றாடம் உழைத்து சாப்பிடும் மீனவர்கள் அவதி உள்ளூர் இழுவைமடி மற்றும் எல்லை தாண்டிய இந்திய மீனவர்களின் ரோலர்களால் தொடர்ந்தும் வடக்கு மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக வடமாகாண மீனவ அமைப்பின் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் இன்று தனது இல்லத்தில் நாடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தில் சகல தடை செய்யப்பட்ட கடற்றொழில்களும் அதிகாரிகளால் கட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்ற போதும் யாழ்ப்பாணத்தில் நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சு அதிகாரிகள் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்துவதில்லை.இந்தியன் இழுவைமடி படகுகள் மீன் உற்பத்தி இடங்களை அழித்து நாசம் செய்கின்றபோதும் அதைவிட அதிகமாக தற்போது உள்ளூர் இழுவைமடி படகுகள் மீன் உற்பத்தி இடங்களை அழித்து மீன் உறப்பத்தியை இல்லாமல் செய்கின்றன. தற்போதும் வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு கடல் பகுதிகளில் சட்டவிரோத சுருக்குவலை தொழில், டைனமெட் மீன்பிடி, மற்றும் பிற மாவட்ட மீனவர்களின் வாடி அமைத்து கடல் அட்டை பிடிக்கும் தொழில்கள் இடம்பெற்று வருவதாகவும் அதனை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள், அமைச்சர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தெரிவித்தார். இதனால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக்கவும், தற்போது மீனவர்கள் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், ஒரு நாளைக்கு ஒரு மீனவனுக்கு 30 லீட்டர் தொடக்கம் 50 லீட்டர் மண்ணெண்ணெய் தேவைப்படுவதாகவும், ஆனால் ஒரு கிழமைக்கு 20 லிட்டர் மண்ணெண்ணெயை கூட பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார். அவ்வாறு மீனை பிடித்து கரைக்கு வந்தால் தற்போதைய எரிபொருள் முறைமை காரணமாக கொழும்புக்கு மீன் கொண்டு செல்லும் குளிரூட்டி வாகனங்களுக்கான எரிபொருள் பற்றாகுறையால் குளிரூட்டிகளில் மீன் கொண்டு செல்லாமையால் விற்பனை செய்ய முடியாதுள்ளது.மீனவர்களது பிரச்சனைகளை உரியவர்கள் கவனமெடுத்து அவர்களது வாழ்வாதாரம் மேம்பட உதவுமாறும் கோரிக்கை விடுத்தார்.