• Apr 20 2026

புனித நோன்பு பெருநாள் நாளை மறுதினம் -இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அறிவிப்பு

Chithra / Mar 19th 2026, 8:17 pm
image

ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.

இதன்போதே, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கமைய, இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை மறுதினம் (21) புனித நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுவின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிஸாம் அல் பத்தாஹி அறிவித்துள்ளார்.

புனித நோன்பு பெருநாள் நாளை மறுதினம் -இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அறிவிப்பு ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.ஷவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.இதன்போதே, கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதற்கமைய, இலங்கை வாழ் முஸ்லிம்கள் நாளை மறுதினம் (21) புனித நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுவின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிஸாம் அல் பத்தாஹி அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement