'அஸ்வெசும' நலன்புரி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் பயனாளிகளுக்கு 5ஆயிரத்து 196 கோடியே 70 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அஸ்வெசும' பயனாளிகளின் மார்கழி மாத கொடுப்பனவாக வங்கிகளுக்கு நிதி அமைச்சு 879 கோடியே 30 இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளது.
இந்தப் பணத்தை அஸ்வெசும நன்மை பெறும் 14 இலட்சத்து 10 ஆயிரத்து 64 குடும்பங்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்தார்.