• May 11 2024

யாழ். நகரில் அனுமதியை மீறி டிஜே களியாட்ட நிகழ்வு! மீண்டும் சர்ச்சை

Chithra / Dec 11th 2023, 3:10 pm
image

Advertisement

 

யாழ் மாநகர சபை மற்றும் பொலிஸாரின் அனுமதியை மீறி யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட டிஜே களியாட்ட நிகழ்வு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றையதினம்(10) இரவு இந்த களியாட்ட நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.

எனினும், யாழ்ப்பாண மாநகர சபை இந்த களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி வழங்கவில்லை என்று அறிவித்துள்ளது. 

“ இந்த களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி கோரப்பட்டதாகவும், எனினும் தாங்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்பதுடன் அனுமதியை மீறி இந்த களியாட்ட நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதாகவும்” யாழ் மாநகர ஆணையாளரை தெரிவித்துள்ளார்.

மேலும், அனுமதியை மீறி நடத்தப்பட்ட இந்த களியாட்ட நிகழ்வு தொடர்பில் குறித்த விடுதி நிர்வாகத்தினரிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் யாழ். மாநகர ஆணையாளர் குறிப்பிட்டார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில், இந்த இரவு இசை விருந்துக்கு, ஒருவருக்கு உணவுடனான நுழைவுச் சீட்டு 3 ஆயிரம் ரூபாய்க்கும், சாதாரண நுழைவுச் சீட்டு 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான, கேளிக்கை நிகழ்வுகளுக்கு நுழைவுச்சீட்டு விற்பனை செய்வதாயின் மாநகர சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என்பதுடன், நுழைவுச் சீட்டின் பெறுமதியில் குறிப்பிட்ட வீதம் மாநகர சபைக்கு வரியாக செலுத்தப்பட வேண்டும்.

எனினும், எவ்வித அனுமதிகளும் இன்றி இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதுடன் வரி ஏய்ப்பு செய்யும் வகையிலும் இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இந்த கேளிக்கை நிகழ்வின்போது, மதுபான பாவனை தாரளமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த மாதம் 4ஆம் திகதி நடத்தப்பட்ட இதேபோன்றதொரு கேளிக்கை இசை நிகழ்ச்சி பாரிய சர்ச்சைகளை  ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். நகரில் அனுமதியை மீறி டிஜே களியாட்ட நிகழ்வு மீண்டும் சர்ச்சை  யாழ் மாநகர சபை மற்றும் பொலிஸாரின் அனுமதியை மீறி யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட டிஜே களியாட்ட நிகழ்வு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நேற்றையதினம்(10) இரவு இந்த களியாட்ட நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.எனினும், யாழ்ப்பாண மாநகர சபை இந்த களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி வழங்கவில்லை என்று அறிவித்துள்ளது. “ இந்த களியாட்ட நிகழ்வுக்கு அனுமதி கோரப்பட்டதாகவும், எனினும் தாங்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை என்பதுடன் அனுமதியை மீறி இந்த களியாட்ட நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதாகவும்” யாழ் மாநகர ஆணையாளரை தெரிவித்துள்ளார்.மேலும், அனுமதியை மீறி நடத்தப்பட்ட இந்த களியாட்ட நிகழ்வு தொடர்பில் குறித்த விடுதி நிர்வாகத்தினரிடம் விளக்கம் கோரியுள்ளதாகவும் யாழ். மாநகர ஆணையாளர் குறிப்பிட்டார்.தனியார் நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில், இந்த இரவு இசை விருந்துக்கு, ஒருவருக்கு உணவுடனான நுழைவுச் சீட்டு 3 ஆயிரம் ரூபாய்க்கும், சாதாரண நுழைவுச் சீட்டு 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறான, கேளிக்கை நிகழ்வுகளுக்கு நுழைவுச்சீட்டு விற்பனை செய்வதாயின் மாநகர சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என்பதுடன், நுழைவுச் சீட்டின் பெறுமதியில் குறிப்பிட்ட வீதம் மாநகர சபைக்கு வரியாக செலுத்தப்பட வேண்டும்.எனினும், எவ்வித அனுமதிகளும் இன்றி இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளதுடன் வரி ஏய்ப்பு செய்யும் வகையிலும் இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.இந்த கேளிக்கை நிகழ்வின்போது, மதுபான பாவனை தாரளமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, கடந்த மாதம் 4ஆம் திகதி நடத்தப்பட்ட இதேபோன்றதொரு கேளிக்கை இசை நிகழ்ச்சி பாரிய சர்ச்சைகளை  ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement