யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு பரவும் வகையில் சுற்றுசூழலை வைத்திருந்த காணி உரிமையாளர்கள் 12 பேருக்கு எதிராக சுகாதார பிரிவினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வடமாகாண பிரதம செயலாளர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் படி கடந்த முதலாம் திகதி முதல் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்காதவர்களும் கடும் நடவடிக்கை எடுக்கவும் பணிக்கப்பட்டது.
சுகாதார திணைக்களம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், இராணுவம் ஆகியோரை குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.