மோட்டார் சைக்கிளும், சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ். சாவகச்சேரி ஏ9 வீதி அரசடிப் பகுதியில் இன்று இரவு 8 15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், சைக்கிளுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
சம்பவத்தில் இளைஞர் ஒருவரும், வயோதிபருமே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.