கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான நீர் வழங்கும் குளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறுவடை விழா இன்றைய தினம் (27) இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பண்ணங் கண்டி பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி கமநலசேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்புகள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.