• Oct 18 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை; பலத்த காற்று, மின்னல் தொடர்பில் அவதானம்

Chithra / Oct 17th 2025, 8:14 am
image

 


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை  தீபாவளி தினத்துக்கு அண்மையாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, 27, 28ஆம் திகதிகளில் (சில சந்தர்ப்பங்களில் சூறா வழியாக) வலுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு Thailand நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட மொன்தா (Montha – Pronounce as Mon-Tha) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.

இது வட தமிழ்நாட்டிற்கும் தெற்கு ஆந்திராவில் பிரதேசத்திற்கு இடையில் ஊடறுத்து செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை; பலத்த காற்று, மின்னல் தொடர்பில் அவதானம்  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.இதேவேளை  தீபாவளி தினத்துக்கு அண்மையாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, 27, 28ஆம் திகதிகளில் (சில சந்தர்ப்பங்களில் சூறா வழியாக) வலுவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.இது சூறாவளியாக வலுவடையும் சந்தர்ப்பத்தில் இதற்கு Thailand நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட மொன்தா (Montha – Pronounce as Mon-Tha) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும்.இது வட தமிழ்நாட்டிற்கும் தெற்கு ஆந்திராவில் பிரதேசத்திற்கு இடையில் ஊடறுத்து செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement