நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையைக் கருத்திற்கொண்டு, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
அதன்படி,
கண்டி மாவட்டம்: உடுதும்பர, கங்க இஹல கோரளை, தொளுவ, யட்டிநுவர.
இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி ஆகிய இடங்களுக்கு வெளியேற்ற சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானமாக இருக்குமாறு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவான, அயகம ஆகிய இடங்களுக்கு இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அத்துடன், எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 23 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த கலாநிதி வசந்த சேனாதீர:
இன்று கிடைக்கும் மழைவீழ்ச்சியுடன் இந்த அறிவிப்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம். கடந்த சில நாட்களாக பெய்த அதிக மழையுடன் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதால் பொதுமக்களை மிகுந்த அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஏற்கனவே ஏற்பட்ட மண்சரிவுகளினால் வீதிகளில் படிந்துள்ள மண் மற்றும் கற்பாறைகள் இந்த மழையுடன் மேலும் அடித்துச் செல்லப்படக்கூடிய அபாயம் உள்ளது. இது தொடர்பில் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே, குறித்த இடங்களைக் கடந்து செல்லும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேபோன்று, மழையின் வேகம் அதிகரித்தால் அந்த அபாயகரமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து, தங்களது பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளுமாறும் கோருகிறோம் என தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி எஹெலியகொடை பகுதியில் பதிவாகியுள்ளது. அதன்படி 171 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டுகஸ்தொட்டை பகுதியில் 120 மில்லிமீற்றர் மழையும், சபரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அதிகாரி மலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாட்டில் இன்று கடும் மழை: 4 மாவட்டங்களுக்கு 'வெளியேறுவதற்கான' சிவப்பு எச்சரிக்கை நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையைக் கருத்திற்கொண்டு, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார். அதன்படி,கண்டி மாவட்டம்: உடுதும்பர, கங்க இஹல கோரளை, தொளுவ, யட்டிநுவர. கேகாலை மாவட்டம்: கேகாலை, யட்டியாந்தோட்டை, மாவனல்லை, தெஹியோவிட்ட, அரநாயக்க. மாத்தளை மாவட்டம்: லக்கல பல்லேகம, அம்பன்கங்க கோரளை, உக்குவளை, வில்கமுவ, இறத்தோட்டை. இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி ஆகிய இடங்களுக்கு வெளியேற்ற சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.மேலும், ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழ் அவதானமாக இருக்குமாறு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. அதன்படி,பதுளை மாவட்டம்: ஹல்துமுல்ல. காலி மாவட்டம்: நியகம. கண்டி மாவட்டம்: மெததும்பர, பாததும்பர. மொனராகலை மாவட்டம்: படல்கும்புர. நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன, வலப்பனை, நோவூட், அம்பகமுவ. இரத்தினபுரி மாவட்டம்: கிரியெல்ல, கலவான, அயகம ஆகிய இடங்களுக்கு இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.அத்துடன், எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 23 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த கலாநிதி வசந்த சேனாதீர: இன்று கிடைக்கும் மழைவீழ்ச்சியுடன் இந்த அறிவிப்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம். கடந்த சில நாட்களாக பெய்த அதிக மழையுடன் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதால் பொதுமக்களை மிகுந்த அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே ஏற்பட்ட மண்சரிவுகளினால் வீதிகளில் படிந்துள்ள மண் மற்றும் கற்பாறைகள் இந்த மழையுடன் மேலும் அடித்துச் செல்லப்படக்கூடிய அபாயம் உள்ளது. இது தொடர்பில் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். எனவே, குறித்த இடங்களைக் கடந்து செல்லும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேபோன்று, மழையின் வேகம் அதிகரித்தால் அந்த அபாயகரமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து, தங்களது பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ளுமாறும் கோருகிறோம் என தெரிவித்தார். இதேவேளை நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி எஹெலியகொடை பகுதியில் பதிவாகியுள்ளது. அதன்படி 171 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.கட்டுகஸ்தொட்டை பகுதியில் 120 மில்லிமீற்றர் மழையும், சபரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அதிகாரி மலித் பெர்னாண்டோ தெரிவித்தார்.