அநுராதபுரம்- புத்தளம் வீதி நொச்சியாகம அம்பஹகவெவ பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் காரொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.
இவ் விபத்து சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரின் அதிவேகம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
அதேவேளை குறித்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் காரின் முன்பகுதி பகுதியளவில் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதிவேகம். அடித்து தூக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்- இருவர் படுகாயம். அநுராதபுரம்- புத்தளம் வீதி நொச்சியாகம அம்பஹகவெவ பிரதேசத்தில் இரு மோட்டார் சைக்கிள்கள் காரொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.இவ் விபத்து சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றது.குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரின் அதிவேகம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக தெரியவருகின்றது.அதேவேளை குறித்த விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன் காரின் முன்பகுதி பகுதியளவில் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.