• Sep 29 2024

ரஷ்யாவில் உயர்கல்வி; மாணவர்களை வைத்து பாரிய மோசடி! விமான நிலையத்தில் சிக்கிய நபர்

Chithra / Jun 21st 2024, 8:38 pm
image

Advertisement

 

ரஷ்யாவில் உயர்கல்வி வழங்குவதாகக் கூறி இலங்கை முழுவதிலும் உள்ள மாணவர்களை சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று பணத்தை ஏமாற்றியதாக கூறப்படும் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளது.

சந்தேகநபர் வத்தளை, ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர்  எனவும் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவில் உயர் கல்விக்காக கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை ஏமாற்றியதாக நீர்கொழும்பு விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட விமானத் தடையைப் பயன்படுத்திய அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு மேலதிகமாக மாத்தறை தலைமையக பொலிஸாருக்கு 17 முறைப்பாடுகளும், குளியாப்பிட்டிய பொலிஸில் 02 முறைப்பாடுகளும், குருநாகல் பொலிஸில் 03 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும், இவர் தொடர்பில் வாதுவ, அம்பாறை மற்றும் மொரட்டுவ பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோஹன முனசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் உயர் கல்வி பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றி ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்ற மாணவரொருவரை கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபருக்கு எதிராக ரஷ்யா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர், சந்தேக நபர் ரஷ்யாவிலிருந்து தப்பித்து விமானம் மூலம் நேற்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததையடுத்து நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ரஷ்யாவில் உயர்கல்வி; மாணவர்களை வைத்து பாரிய மோசடி விமான நிலையத்தில் சிக்கிய நபர்  ரஷ்யாவில் உயர்கல்வி வழங்குவதாகக் கூறி இலங்கை முழுவதிலும் உள்ள மாணவர்களை சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று பணத்தை ஏமாற்றியதாக கூறப்படும் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரை நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளது.சந்தேகநபர் வத்தளை, ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர்  எனவும் தெரியவந்துள்ளது.ரஷ்யாவில் உயர் கல்விக்காக கட்டான பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை ஏமாற்றியதாக நீர்கொழும்பு விஷேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பெறப்பட்ட விமானத் தடையைப் பயன்படுத்திய அவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு மேலதிகமாக மாத்தறை தலைமையக பொலிஸாருக்கு 17 முறைப்பாடுகளும், குளியாப்பிட்டிய பொலிஸில் 02 முறைப்பாடுகளும், குருநாகல் பொலிஸில் 03 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.மேலும், இவர் தொடர்பில் வாதுவ, அம்பாறை மற்றும் மொரட்டுவ பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோஹன முனசிங்க தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சந்தேக நபர் உயர் கல்வி பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றி ரஷ்யாவிற்கு அழைத்துச் சென்ற மாணவரொருவரை கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபருக்கு எதிராக ரஷ்யா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.பின்னர், சந்தேக நபர் ரஷ்யாவிலிருந்து தப்பித்து விமானம் மூலம் நேற்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததையடுத்து நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement