• Sep 29 2024

நெல்லியடியில் 25 ஆண்டுகளாக வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் கௌரவிப்பு...!

Sharmi / Jun 20th 2024, 8:56 am
image

Advertisement

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி வணிகர்கழகத்தின் 25 ஆண்டுகளுக்கு மேல் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(19) மாலை நெல்லியடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்  நெல்லியடி வணிகர் கழக தலைவர் சி.சிவம் தலைமையில் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மங்கள இசை முழங்க மலர் மாலை அணிவிக்கப்பட்டு  விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு  நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளை தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகனுக்கு  பொதுப்பணி பூபதி  எனும் உயர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்து கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன், யாழின் பிரபல தொழிலதிபர் நாகரத்தினம், யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் ஆதித்தன், ஆகியோருக்கும் அவர்களது அளப்பரிய சேவைக்காக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கான விருதுகளையும் வடக்கு மாகாண ஆளுநர் PSM சார்ளஸ் வழங்கிவைத்தார்.

தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.


இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் PSM சார்ல்ஸ், யாழ் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் ஆதித்தன், செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், நெல்லியடி வணிகர் கழக தலைவர் சி.சிவம், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன், கரவெட்டி சுகாதார வைத்திய ஆதிகாரி மருத்துவ கலாநிதி செந்தூரன், தமிழ் துறை பேராசிரியர் சிவலிங்கராசா, மற்றும் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன, வல்வெட்டித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, நெல்லியடி வணிகர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


நெல்லியடியில் 25 ஆண்டுகளாக வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் கௌரவிப்பு. யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி வணிகர்கழகத்தின் 25 ஆண்டுகளுக்கு மேல் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(19) மாலை நெல்லியடி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில்  நெல்லியடி வணிகர் கழக தலைவர் சி.சிவம் தலைமையில் இடம்பெற்றது.இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மங்கள இசை முழங்க மலர் மாலை அணிவிக்கப்பட்டு  விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு  நிகழ்வுகள் ஆரம்பமாகின.நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளை தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகனுக்கு  பொதுப்பணி பூபதி  எனும் உயர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்து கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன், யாழின் பிரபல தொழிலதிபர் நாகரத்தினம், யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் ஆதித்தன், ஆகியோருக்கும் அவர்களது அளப்பரிய சேவைக்காக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இவர்களுக்கான விருதுகளையும் வடக்கு மாகாண ஆளுநர் PSM சார்ளஸ் வழங்கிவைத்தார். தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு புத்தகப்பைகள் மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் PSM சார்ல்ஸ், யாழ் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் ஆதித்தன், செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன், நெல்லியடி வணிகர் கழக தலைவர் சி.சிவம், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன், கரவெட்டி சுகாதார வைத்திய ஆதிகாரி மருத்துவ கலாநிதி செந்தூரன், தமிழ் துறை பேராசிரியர் சிவலிங்கராசா, மற்றும் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன, வல்வெட்டித்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, நெல்லியடி வணிகர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement