• Apr 27 2024

நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு..!!

Tamil nila / Mar 17th 2024, 6:46 am
image

Advertisement

இன்று (17) நாடளாவிய ரீதியில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்று தென்கிழக்கிலிருந்து வீசுவதுடன்,  மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கில் இருந்து வீசக்கூடுவதுடன், நாட்டின் ஏனைய கடற்பரப்புக்களில் குறிப்பிட்ட திசையின்றி காற்று வீசக்கூடும்.

குறிப்பாக காற்றின் வேகம் மணிக்கு 15-30 கிலோ மீற்றர் வரை இருக்கும். 

மேலும் நாட்டை சூழவுள்ள கடல்பரப்புக்கள் சாதாரணமான நிலையில் இருந்து சற்று கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு. இன்று (17) நாடளாவிய ரீதியில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும்.காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்று தென்கிழக்கிலிருந்து வீசுவதுடன்,  மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கில் இருந்து வீசக்கூடுவதுடன், நாட்டின் ஏனைய கடற்பரப்புக்களில் குறிப்பிட்ட திசையின்றி காற்று வீசக்கூடும்.குறிப்பாக காற்றின் வேகம் மணிக்கு 15-30 கிலோ மீற்றர் வரை இருக்கும். மேலும் நாட்டை சூழவுள்ள கடல்பரப்புக்கள் சாதாரணமான நிலையில் இருந்து சற்று கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement