• Sep 08 2024

நீர்கொழும்பில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு; இருவர் கைது

Chithra / Jul 25th 2024, 3:13 pm
image

Advertisement

 

நீர்கொழும்பு - தடுகம களப்பு பிரதேசத்தில் இயந்திர படகுளில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (24) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேற்கு கடற்படை கட்டளையின் களனி கடற்படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமான ஆறு இயந்திர படகுகளை பரிசோதனை செய்தனர்.

இதன்போது, குறித்த ஆறு இயந்திர படகுகளிலும்  மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் 76 உர மூடைகளில்  அடைக்கப்பட்ட 1780 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பீடி இலைகள் கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆறு இயந்திர படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 இற்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் வென்னப்புவ, அளுத்குருவ ஆகிய பகுதிகளையும் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 1780 கிலோ கிராம் பீடி இலைகள், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் இயந்திர படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


நீர்கொழும்பில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு; இருவர் கைது  நீர்கொழும்பு - தடுகம களப்பு பிரதேசத்தில் இயந்திர படகுளில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (24) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.மேற்கு கடற்படை கட்டளையின் களனி கடற்படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமான ஆறு இயந்திர படகுகளை பரிசோதனை செய்தனர்.இதன்போது, குறித்த ஆறு இயந்திர படகுகளிலும்  மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் 76 உர மூடைகளில்  அடைக்கப்பட்ட 1780 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.அத்துடன் சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பீடி இலைகள் கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆறு இயந்திர படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 இற்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் வென்னப்புவ, அளுத்குருவ ஆகிய பகுதிகளையும் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 1780 கிலோ கிராம் பீடி இலைகள், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் இயந்திர படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement