• Sep 19 2024

இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்; மற்றுமொரு பெண் காயம்

Chithra / Sep 15th 2024, 8:25 am
image

Advertisement


வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப்பிட்டிய பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

நேற்று (14) மாலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோரகஹவத்த, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பெண் ஒருவர் தனது கணவரால் தாக்கப்படுவதாக 119 தகவல் நிலையத்தின் மூலம் வாத்துவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தததை அவதானித்ததுடன், மற்றுமொரு பெண் காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் காயமடைந்தவர் உயிரிழந்தவரின் சகோதரி என்பது தெரியவந்துள்ளது.

கொலையை செய்த 34 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, காணி தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

பதுரலிய, ஹீன்பல்வில பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்வெல்தொட்ட, மொரபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்; மற்றுமொரு பெண் காயம் வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப்பிட்டிய பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.நேற்று (14) மாலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கோரகஹவத்த, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பெண் ஒருவர் தனது கணவரால் தாக்கப்படுவதாக 119 தகவல் நிலையத்தின் மூலம் வாத்துவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதன்படி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தததை அவதானித்ததுடன், மற்றுமொரு பெண் காயமடைந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பொலிசார் நடத்திய விசாரணையில் காயமடைந்தவர் உயிரிழந்தவரின் சகோதரி என்பது தெரியவந்துள்ளது.கொலையை செய்த 34 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை, காணி தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.பதுரலிய, ஹீன்பல்வில பிரதேசத்தில் இந்த கொலை சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அத்வெல்தொட்ட, மொரபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement