• Sep 20 2024

ரணிலுடன் நேரலையாக பகிரங்க விவாதத்தில் ஈடுபட நான் தயார்- அநுர அழைப்பு..!

Sharmi / Sep 11th 2024, 9:37 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கேட்கப்படுகின்ற சகல விடயங்களுக்கும் தான் விடை கூறுவதற்குத் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம்மை 'எனது நண்பர் அநுர'என விளிக்கிறார்.

எதிர்வரும் தமது அரசாங்கத்தில் ரணிலுக்கு எதிரான தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள இவ்வாறு தம்மை நண்பர் என கூறு கிறார்.

எனினும் தாம் இவ்வாறு நண்பர் என அழைப்பதற்கு சிக்கப் போவதில்லை.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மத்திய வங்கி பிணை முறி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும்.

தேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரலையாக பகிரங்க விவாதமொன்றில் ஈடுபட நான் தயார்  எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரணிலுடன் நேரலையாக பகிரங்க விவாதத்தில் ஈடுபட நான் தயார்- அநுர அழைப்பு. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கேட்கப்படுகின்ற சகல விடயங்களுக்கும் தான் விடை கூறுவதற்குத் தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தம்மை 'எனது நண்பர் அநுர'என விளிக்கிறார். எதிர்வரும் தமது அரசாங்கத்தில் ரணிலுக்கு எதிரான தண்டனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள இவ்வாறு தம்மை நண்பர் என கூறு கிறார். எனினும் தாம் இவ்வாறு நண்பர் என அழைப்பதற்கு சிக்கப் போவதில்லை.தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மத்திய வங்கி பிணை முறி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும். அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரலையாக பகிரங்க விவாதமொன்றில் ஈடுபட நான் தயார்  எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement