• Sep 15 2024

நான் எப்போதும் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்தான்; தலைவரின் தீர்மானத்தை பலப்படுத்துவேன் - எம்.எச்.எம்.நவவி தெரிவிப்பு!

Tamil nila / Aug 30th 2024, 8:45 pm
image

Advertisement

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் தீர்மானத்தைப் பலப்படுத்துவதற்கும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி இன்று (30) தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை தான் ஆதரவளிக்கப் போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என்றும் அவர் கூறினார்.


இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் ,

"எனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலேயே நான் உள்ளேன். இந்தக் கட்சிதான் என்னை தேசியப் பட்டியலில் எம்.பியாக்கி, புத்தளம் மாவட்டத்தை கௌரவப்படுத்தியது.

புத்தளம் மாவட்ட மக்களை கௌரவப்படுத்திய எமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஒரு நேர்மையான அரசியல்வாதி. அவருக்குத் துரோகமிழைப்பது சமூகத்துக்கான சாபக்கேடாக அமையும். 

அதிகார ஆசைகளுக்காக கட்சி தாவியவர், அரசியலில் நிலைத்ததாக வரலாறே இல்லை. சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் இந்த ஜனாதிபதித் தேர்தலில், எமது கட்சியின் தலைவர் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளார். 

கட்சித் தலைவர் எடுத்த இந்த தீர்மானத்தை நாம் நிச்சயமாக பலப்படுத்த வேண்டும்.

தேர்தல் காலங்களில் இவ்வாறான வங்குறோத்து வதந்திகள் பரவுவது வாழமையே. ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

 

நான் எப்போதும் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்தான்; தலைவரின் தீர்மானத்தை பலப்படுத்துவேன் - எம்.எச்.எம்.நவவி தெரிவிப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமையின் தீர்மானத்தைப் பலப்படுத்துவதற்கும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி இன்று (30) தெரிவித்தார்.மேலும், ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை தான் ஆதரவளிக்கப் போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என்றும் அவர் கூறினார்.இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் ,"எனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலேயே நான் உள்ளேன். இந்தக் கட்சிதான் என்னை தேசியப் பட்டியலில் எம்.பியாக்கி, புத்தளம் மாவட்டத்தை கௌரவப்படுத்தியது.புத்தளம் மாவட்ட மக்களை கௌரவப்படுத்திய எமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஒரு நேர்மையான அரசியல்வாதி. அவருக்குத் துரோகமிழைப்பது சமூகத்துக்கான சாபக்கேடாக அமையும். அதிகார ஆசைகளுக்காக கட்சி தாவியவர், அரசியலில் நிலைத்ததாக வரலாறே இல்லை. சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் இந்த ஜனாதிபதித் தேர்தலில், எமது கட்சியின் தலைவர் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளார். கட்சித் தலைவர் எடுத்த இந்த தீர்மானத்தை நாம் நிச்சயமாக பலப்படுத்த வேண்டும்.தேர்தல் காலங்களில் இவ்வாறான வங்குறோத்து வதந்திகள் பரவுவது வாழமையே. ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார். 

Advertisement

Advertisement

Advertisement