• Jun 19 2025

பூநகரியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள்-ஐவர் கைது..!

Sharmi / Jun 18th 2025, 1:39 pm
image

பூநகரியில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகரி குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் மணல் அகழ்வுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கு அமைவாக இப்பகுதியில் இருந்து சட்டவிரோத மணல் அகழ்வுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இப்பகுதியில் இருந்து அனுமதிப் பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் இன்றையதினம் நான்கு டிப்பர்கள் மணல் அகழ்வில் ஈடுபடுவதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு  மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, விசேட குற்ற தடுப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக நான்கு டிப்பர்களும் அதன்  சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை ஜெயபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட பாலை மர குற்றிகளுடன் பயணித்த கற்பக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கப் ரக வாகனம் மற்றும் நான்கு டிப்பர்கள் சந்தேக நபர்கள் என்பனவற்றை பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.



பூநகரியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள்-ஐவர் கைது. பூநகரியில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகரி குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் மணல் அகழ்வுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.இதற்கு அமைவாக இப்பகுதியில் இருந்து சட்டவிரோத மணல் அகழ்வுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இப்பகுதியில் இருந்து அனுமதிப் பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் இன்றையதினம் நான்கு டிப்பர்கள் மணல் அகழ்வில் ஈடுபடுவதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு  மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, விசேட குற்ற தடுப்பு பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக நான்கு டிப்பர்களும் அதன்  சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேவேளை ஜெயபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு செல்ல முற்பட்ட பாலை மர குற்றிகளுடன் பயணித்த கற்பக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட கப் ரக வாகனம் மற்றும் நான்கு டிப்பர்கள் சந்தேக நபர்கள் என்பனவற்றை பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement