குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடிரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகத்தை நீக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த போராட்டம் காரணமாக கடவுச் சீட்டு பெறுகை உள்ளிட்ட சேவைகளுக்காக வருகை வந்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.