• Sep 17 2024

நயினாதீவு - குறிகட்டுவான் படகு சேவை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Chithra / Jun 1st 2024, 4:34 pm
image

Advertisement

 

நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இன்று சனிக்கிழமை தொடக்கம் புதிய நேர அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை நயினாதீவு உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி வெளியிட்டுள்ளார்.

நயினாதீவு - குறிகட்டுவான் இடையேயான படகுச் சேவை காலை 6.30 முதல் மாலை 5.30 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு படகு புறப்படும்.

மற்றும் குறிகட்டுவான் - நயினாதீவு இடையேயான படகுச் சேவை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு படகு புறப்படும் என கூறப்பட்டுள்ளது.

நயினாதீவு நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.     

நயினாதீவு - குறிகட்டுவான் படகு சேவை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு  நயினாதீவு குறிகட்டுவான் படகு சேவை இன்று சனிக்கிழமை தொடக்கம் புதிய நேர அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை நயினாதீவு உப அலுவலகத்தின் பொறுப்பதிகாரி வெளியிட்டுள்ளார்.நயினாதீவு - குறிகட்டுவான் இடையேயான படகுச் சேவை காலை 6.30 முதல் மாலை 5.30 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு படகு புறப்படும்.மற்றும் குறிகட்டுவான் - நயினாதீவு இடையேயான படகுச் சேவை காலை 7 மணி முதல் மாலை 6.30 மணிவரை ஒவ்வொரு 30 நிமிடத்துக்கும் ஒரு படகு புறப்படும் என கூறப்பட்டுள்ளது.நயினாதீவு நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07ம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.     

Advertisement

Advertisement

Advertisement