முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற விடயத்தை நான் அண்மையில் நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தேன்.
அதற்கமைய, கண்டறியப்பட்ட விடயங்களை நீதிமன்றத்துக்கு முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றில் அவற்றை முன்வைத்ததன் பின்னர், நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும். என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதாளக்குழுக்களுக்கு இடையிலான மோதல்களே தொடர்ச்சியாக துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது என அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
தெஹிவளையில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னணியிலும் அவ்விதமான மோதல் நிலைமையே காணப்படுகின்றது.
வெளிநாடுகளில் உள்ள பாதாளக்குழுவினரை கைது செய்வதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சட்டவிரோதமான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை மீட்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என்றார்.
பிள்ளையான் தொடர்பான முக்கிய விடயங்கள் நீதிமன்றுக்கு – பாதுகாப்பு அமைச்சர் நடவடிக்கை முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் தொடர்பான சில விடயங்கள் விரைவில் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துறை சந்திரகாந்தன் முன்கூட்டியே அறிந்திருந்தார் என்ற விடயத்தை நான் அண்மையில் நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தேன்.அதற்கமைய, கண்டறியப்பட்ட விடயங்களை நீதிமன்றத்துக்கு முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.நீதிமன்றில் அவற்றை முன்வைத்ததன் பின்னர், நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும். என தெரிவித்துள்ளார்.இந்நிலையில் பாதாளக்குழுக்களுக்கு இடையிலான மோதல்களே தொடர்ச்சியாக துப்பாக்கிப் பிரயோகங்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது என அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.தெஹிவளையில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னணியிலும் அவ்விதமான மோதல் நிலைமையே காணப்படுகின்றது. உள்நாட்டில் பாதாளக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரப்படையினரின் பங்கேற்புடன் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளில் உள்ள பாதாளக்குழுவினரை கைது செய்வதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன், சட்டவிரோதமான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை மீட்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என்றார்.