• May 18 2024

வலி வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவ கட்டளைத் தளபதியுடன் முக்கிய சந்திப்பு...!

Sharmi / Feb 20th 2024, 2:47 pm
image

Advertisement

வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதியுடன் யாழ் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

பலாலி இராணுவ தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற இச் சந்திப்பில், யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பில் ஜனாதிபதியின் வடமாகாண மேலதிக செயலாளர் இளங்கோவன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்( காணி) கே.ஸ்ரீமோகனன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகங்கா சுதீஸ்னர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் காணிகளை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

வலி வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவ கட்டளைத் தளபதியுடன் முக்கிய சந்திப்பு. வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதியுடன் யாழ் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.பலாலி இராணுவ தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற இச் சந்திப்பில், யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் உள்ளிட்ட குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.குறித்த சந்திப்பில் ஜனாதிபதியின் வடமாகாண மேலதிக செயலாளர் இளங்கோவன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்( காணி) கே.ஸ்ரீமோகனன், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகங்கா சுதீஸ்னர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.இதன்போது யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட வலிகாமம் வடக்கில் காணிகளை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Advertisement

Advertisement

Advertisement