• May 17 2024

எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார்..! வைத்தியர் பெல்லானவின் அதிரடி முடிவு

Chithra / Feb 20th 2024, 2:23 pm
image

Advertisement

 

எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

இன்று (20) காலை ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த போதே வைத்தியர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும்  இன்று சுகாதார அமைச்சும், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் வாய்மொழியாக நிர்வாகம் செய்கிறார்கள். 

இருநூறு முந்நூறு பேர் சேர்ந்தால் இவரை விரட்டுங்கள் என்றால், விரட்டி விடுவார்கள்.

அதன் ஊடாகத்தான் முடிவுகள் எடுக்கப்படும். 

ஆனால் நானும் ஓய்வு பெற தயாராக இருக்கிறேன். இந்த பொதுச் சேவையில் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

பொதுமக்களின் நலனுக்கான செயற்படுகையில் இவ்வாறான இடையூறுகள் செய்யப்படுகின்றது. 

ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து எனக்கு இடமாற்றம் வழங்கினால் நான் ஒய்வு பெற்றுச் சென்று விடுவேன் என தெரிவித்தார்.

எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார். வைத்தியர் பெல்லானவின் அதிரடி முடிவு  எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.இன்று (20) காலை ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த போதே வைத்தியர் இவ்வாறு குறிப்பிட்டார்.மேலும்  இன்று சுகாதார அமைச்சும், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் வாய்மொழியாக நிர்வாகம் செய்கிறார்கள். இருநூறு முந்நூறு பேர் சேர்ந்தால் இவரை விரட்டுங்கள் என்றால், விரட்டி விடுவார்கள்.அதன் ஊடாகத்தான் முடிவுகள் எடுக்கப்படும். ஆனால் நானும் ஓய்வு பெற தயாராக இருக்கிறேன். இந்த பொதுச் சேவையில் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.பொதுமக்களின் நலனுக்கான செயற்படுகையில் இவ்வாறான இடையூறுகள் செய்யப்படுகின்றது. ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து எனக்கு இடமாற்றம் வழங்கினால் நான் ஒய்வு பெற்றுச் சென்று விடுவேன் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement