புத்தளம் பாலாவி பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
சமைத்துக்கொண்டிருந்த வேளை வெளிச்சம் போதாமையினால் மின் குமிழை பொருத்துவதற்கு முற்பட்ட வேளையிலே மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த, சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாராணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக இதன்போது தெரிவித்தனர்.
புத்தளத்தில், பெண்ணொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு புத்தளம் பாலாவி பகுதியில் வீடொன்றில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.சமைத்துக்கொண்டிருந்த வேளை வெளிச்சம் போதாமையினால் மின் குமிழை பொருத்துவதற்கு முற்பட்ட வேளையிலே மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த, சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண்ணின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலதிக விசாராணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக இதன்போது தெரிவித்தனர்.