நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனச் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 10 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான காலநிலையைக் கருத்திற்கொண்டு தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு நாளை மறுதினம் (27) முதல் இருநாள் டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
கொழும்பு மாநகர எல்லைப்பகுதி, கம்பஹா, களுத்துறை, மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த மாவட்டங்களில் அச்சுறுத்தல் நிலவும் 37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாட்டில் அதிகரித்த டெங்கு நோயாளர்கள் - இருநாள் வேலைத்திட்டம் ஆரம்பம் நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனச் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 10 ஆயிரத்து 886 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நிலவும் மழையுடனான காலநிலையைக் கருத்திற்கொண்டு தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு நாளை மறுதினம் (27) முதல் இருநாள் டெங்கு நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. கொழும்பு மாநகர எல்லைப்பகுதி, கம்பஹா, களுத்துறை, மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த மாவட்டங்களில் அச்சுறுத்தல் நிலவும் 37 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.