மாணவரிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக யாழ்.போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பில் நேற்றையதினம் ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்.போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி செ. பிரணவன்,
போதைப்பொருள் பாவித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அழைத்துவரப்படும் மாணவர்களில் 10இல் 7 பேர் உயிர்கொல்லி போதை மாத்திரைகளை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
'போதைமாத்திரைகளை வடக்குக்கு கொண்டுவரும் மொத்த விற்பனையாளரிடமிருந்து அந்த மாத்திரைகள் விநியோகிக்கும் சங்கிலியை கண்காணித்து சோதனை செய்தாலே இதனை இலகுவாக கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,
நீதிமன்றத்தால் 15 -18 வயதுக்கு இடைப்பட்ட சிறார்கள் 36 பேர் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் நீதிமன்றத்தால் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுமிகளும் அடங்குவர் என்றும் தெரிவித்தார்.
அதேவேளை உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நிலையம் ஒன்றை வடக்கில் இந்த மாத இறுதிக்குள் உடனடியாக ஏதாவது ஓர் இடத்தில் தற்காலிகமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வடக்கு ஆளுநர் நா. வேதநாயகன் அதிகாரிகளை பணித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது அவசியம் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினரும் கோரி வருகின்றனர்.
கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் இதற்கான கட்டடம் எம்மால் அடையாளப்படுத்தப்பட்ட போதும் அது பொருத்தமானதல்ல என்று அவர்கள் எமக்கு தெரிவித்தனர்.
எனவே, மாற்று இடத்தை உடனடியாக அடையாளப்படுத்தி வழங்கவேண்டியுள்ளது. தற்போது அதிகளவு சிறுவர்களும் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாவதால் உடனடியாக மறுவாழ்வு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
இதன்போது அச்சுவேலியில் சிறுவர் சான்று பெற்ற பாடசாலைக்கு அண்மையாகவுள்ள வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்துக்கு சொந்தமான கட்டடத்தை புனரமைப்பு செய்து பயன்படுத்த முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இதை ஏற்ற ஆளுநர், உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அது இயங்குநிலைக்கு வரும் வரையில் இந்த மாத இறுதிக்குள் உடனடியாக ஏதாவது ஓர் இடத்தை தற்காலிகமாக வழங்கவேண்டும் என்றும் கேட்டார்.
இதன்போது, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மூடப்பட்ட பாடசாலைகள் சில உள்ளன. அவற்றின் கட்டடங்களை பார்வையிட்ட பின்னர் கட்டடம் ஒன்றை வழங்குவதாகக் கூறினார்.
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு இல்லத்துக்காக அமைக்கப்பட்ட கட்டடத்தை மறுவாழ்வு நிலையத்துக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
யாழில் மாணவரிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு; ஆளுநர் தலைமையில் முக்கிய கூட்டம். மாணவரிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாக யாழ்.போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் தெரிவித்துள்ளார்.வடக்கில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க புனர்வாழ்வு நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பில் நேற்றையதினம் ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த யாழ்.போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி செ. பிரணவன்,போதைப்பொருள் பாவித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அழைத்துவரப்படும் மாணவர்களில் 10இல் 7 பேர் உயிர்கொல்லி போதை மாத்திரைகளை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.'போதைமாத்திரைகளை வடக்குக்கு கொண்டுவரும் மொத்த விற்பனையாளரிடமிருந்து அந்த மாத்திரைகள் விநியோகிக்கும் சங்கிலியை கண்காணித்து சோதனை செய்தாலே இதனை இலகுவாக கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நீதிமன்றத்தால் 15 -18 வயதுக்கு இடைப்பட்ட சிறார்கள் 36 பேர் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் நீதிமன்றத்தால் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுமிகளும் அடங்குவர் என்றும் தெரிவித்தார்.அதேவேளை உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நிலையம் ஒன்றை வடக்கில் இந்த மாத இறுதிக்குள் உடனடியாக ஏதாவது ஓர் இடத்தில் தற்காலிகமாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வடக்கு ஆளுநர் நா. வேதநாயகன் அதிகாரிகளை பணித்துள்ளார்.யாழ். மாவட்டத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது அவசியம் என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையினரும் கோரி வருகின்றனர். கிளிநொச்சி கிருஷ்ணபுரத்தில் இதற்கான கட்டடம் எம்மால் அடையாளப்படுத்தப்பட்ட போதும் அது பொருத்தமானதல்ல என்று அவர்கள் எமக்கு தெரிவித்தனர்.எனவே, மாற்று இடத்தை உடனடியாக அடையாளப்படுத்தி வழங்கவேண்டியுள்ளது. தற்போது அதிகளவு சிறுவர்களும் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாவதால் உடனடியாக மறுவாழ்வு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.இதன்போது அச்சுவேலியில் சிறுவர் சான்று பெற்ற பாடசாலைக்கு அண்மையாகவுள்ள வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்துக்கு சொந்தமான கட்டடத்தை புனரமைப்பு செய்து பயன்படுத்த முடியும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.இதை ஏற்ற ஆளுநர், உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அது இயங்குநிலைக்கு வரும் வரையில் இந்த மாத இறுதிக்குள் உடனடியாக ஏதாவது ஓர் இடத்தை தற்காலிகமாக வழங்கவேண்டும் என்றும் கேட்டார்.இதன்போது, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மூடப்பட்ட பாடசாலைகள் சில உள்ளன. அவற்றின் கட்டடங்களை பார்வையிட்ட பின்னர் கட்டடம் ஒன்றை வழங்குவதாகக் கூறினார்.மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தால் பாதுகாப்பு இல்லத்துக்காக அமைக்கப்பட்ட கட்டடத்தை மறுவாழ்வு நிலையத்துக்கு பயன்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கும் ஆளுநர் அறிவுறுத்தினார்.