• Oct 02 2024

மருத்துவமனை அலட்சியம் குறித்து அதிகரிக்கும் முறைப்பாடுகள்..! சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்

Chithra / Jan 1st 2024, 12:45 pm
image

Advertisement


சுகாதாரத்துறையில் வருடாந்தம் சுமார் 600 முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இதில் அரச மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்களின் அலட்சியம் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

சுகாதாரத்துறையில் மருத்துவ அலட்சியம் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது குறித்து சுகாதார அமைச்சர் இதன்போது கவலை வெளியிட்டுள்ளார்.

இது நோயாளிகளின் நலனில், சுகாதாரத்துறையின் அர்ப்பணிப்பு பற்றிய கேள்விகளை எழுப்புகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நோயாளிகளின் முறைப்பாடுகளின் முழுமையான பகுப்பாய்வில் பல தவறுகள் கண்டறியப்பட்டதாகவும் அமைச்சர் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களுக்கான சேவையை முன்னுரிமைப்படுத்துமாறும், நோயாளிகளின் நல்வாழ்வை உறுதிசெய்வதில், 

அர்ப்பணிப்பை மறுபரிசீலனை செய்யுமாறும் அமைச்சர் பத்திரன சுகாதார பணியாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். 


மருத்துவமனை அலட்சியம் குறித்து அதிகரிக்கும் முறைப்பாடுகள். சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல் சுகாதாரத்துறையில் வருடாந்தம் சுமார் 600 முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.இதில் அரச மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்களின் அலட்சியம் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பேராதனை போதனா வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.சுகாதாரத்துறையில் மருத்துவ அலட்சியம் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது குறித்து சுகாதார அமைச்சர் இதன்போது கவலை வெளியிட்டுள்ளார்.இது நோயாளிகளின் நலனில், சுகாதாரத்துறையின் அர்ப்பணிப்பு பற்றிய கேள்விகளை எழுப்புகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும், நோயாளிகளின் முறைப்பாடுகளின் முழுமையான பகுப்பாய்வில் பல தவறுகள் கண்டறியப்பட்டதாகவும் அமைச்சர் பத்திரன சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்களுக்கான சேவையை முன்னுரிமைப்படுத்துமாறும், நோயாளிகளின் நல்வாழ்வை உறுதிசெய்வதில், அர்ப்பணிப்பை மறுபரிசீலனை செய்யுமாறும் அமைச்சர் பத்திரன சுகாதார பணியாளர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement