காவலூர் மக்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப இந்தியா என்றும் துணை நிற்கும் என்று யாழ். இந்தியத் துணைத்தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் நிதியுதவியுடன் ஊர்காவற்றுறையில் கடற்றொழிலாளர்களுக்கு 30 மீன்பிடி வலைகளும்
150 பேருக்கான உலர் உணவுப் பொருள்களும் வழங்கும் நிகழ்வு நேற்று (06) இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஊர்காவற்றுறை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க, பண்பாட்டு செழுமை வாய்ந்த
பகுதி. இந்திய ஆதரவுடன் நவீனமயமாக்கப்பட்ட குருநகர் மீன்பிடிவலை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட வலைகளை வழங்குவதில் மகிழ்ச்சி. உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் இவ்வலைகள் மூலம் பலன்கள் சமூகத்துக்குள் தங்குகின்றன.
உலர்ந்த அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் போது இந்திய அரசின் பொது மக்களுக்கான சேவைத் திட்டங்களும் சமூக பங்களிப்பையும் அதிகரிக்கவுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியா மேற்கொண்டு வரும் வீடுகள், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, கலாசாரம் மற்றும் திறனறிதல் பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆராயப்படும்.
வடமாகாண மக்கள், குறிப்பாக ஊர்காவற்றுறை பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய சவால்கள் குறித்து தானறிந்திருப்பதாகவும், இந்தியா எப்போதும் அவர்களுடன் இருந்தது என்றும் இருக்கும் என்ற உறுதியை அளிக்கின்றேன்.மேலும் நம்பிக்கையும், வாய்ப்புகளும், அமைதியும் நிரம்பிய எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப இந்தியா எப்போதும் நண்பனாகவும் துணையாகவும் இருக்கும் - என்றார்.
காவலூர் மக்களின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப இந்தியா என்றும் துணை நிற்கும் - யாழ்.இந்திய துணைத்தூதுவர். காவலூர் மக்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப இந்தியா என்றும் துணை நிற்கும் என்று யாழ். இந்தியத் துணைத்தூதுவர் தெரிவித்துள்ளார்.இந்திய அரசின் நிதியுதவியுடன் ஊர்காவற்றுறையில் கடற்றொழிலாளர்களுக்கு 30 மீன்பிடி வலைகளும் 150 பேருக்கான உலர் உணவுப் பொருள்களும் வழங்கும் நிகழ்வு நேற்று (06) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஊர்காவற்றுறை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க, பண்பாட்டு செழுமை வாய்ந்த பகுதி. இந்திய ஆதரவுடன் நவீனமயமாக்கப்பட்ட குருநகர் மீன்பிடிவலை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட வலைகளை வழங்குவதில் மகிழ்ச்சி. உள்ளூரிலேயே தயாரிக்கப்படும் இவ்வலைகள் மூலம் பலன்கள் சமூகத்துக்குள் தங்குகின்றன.உலர்ந்த அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் போது இந்திய அரசின் பொது மக்களுக்கான சேவைத் திட்டங்களும் சமூக பங்களிப்பையும் அதிகரிக்கவுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்தியா மேற்கொண்டு வரும் வீடுகள், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, கலாசாரம் மற்றும் திறனறிதல் பயிற்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆராயப்படும். வடமாகாண மக்கள், குறிப்பாக ஊர்காவற்றுறை பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய சவால்கள் குறித்து தானறிந்திருப்பதாகவும், இந்தியா எப்போதும் அவர்களுடன் இருந்தது என்றும் இருக்கும் என்ற உறுதியை அளிக்கின்றேன்.மேலும் நம்பிக்கையும், வாய்ப்புகளும், அமைதியும் நிரம்பிய எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப இந்தியா எப்போதும் நண்பனாகவும் துணையாகவும் இருக்கும் - என்றார்.