• Sep 19 2024

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு- நெடுந்தீவு கடற்பரப்பில் சம்பவம்..!

Sharmi / Aug 1st 2024, 8:51 am
image

Advertisement

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் இன்று(01) அதிகாலை இடம்பெற்றது.

நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்களுடன் படகொன்று மீன்பிடியில் ஈடுபட்டது.

இதன்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை படகு, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகை கைப்பற்ற முனைந்த போது இந்திய மீனவர்களின் படகு கவிழ்ந்து குறித்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, இரு இந்திய மீனவர்கள் கடலில் விழுந்த நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மீனவரை காணவில்லை  எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு- நெடுந்தீவு கடற்பரப்பில் சம்பவம். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவம் இன்று(01) அதிகாலை இடம்பெற்றது.நெடுந்தீவு கடற்பரப்பில் ஐந்து இந்திய மீனவர்களுடன் படகொன்று மீன்பிடியில் ஈடுபட்டது.இதன்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படை படகு, அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகை கைப்பற்ற முனைந்த போது இந்திய மீனவர்களின் படகு கவிழ்ந்து குறித்த அசம்பாவிதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து, இரு இந்திய மீனவர்கள் கடலில் விழுந்த நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மீனவரை காணவில்லை  எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement