தங்களால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டம் இந்தியாக்கு எதிரானதோ அல்லது தமிழ் நாட்டு அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல என குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் ஆலோசகர் மரியநாயகம் இமானுவேல் தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழில் இன்று காலை மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மீனவர்கள் படுகின்ற துன்பங்ளை வெளிக்காட்டவேண்டுமென்ற உயரிய சிந்தனையிலேயே இந்த போராட்டத்தை முன்னெடுத்தாக அவர் குறிப்பிட்டிருந்தார்.