• Sep 20 2024

வெந்நீர் கொதிகலனில் தவறி வீழ்ந்து இந்திய பிரஜை உயிரிழப்பு..! இலங்கையில் சோகம் samugammedia

Chithra / Oct 1st 2023, 11:42 am
image

Advertisement


சுடுநீர் கொதிகலனில் தவறி விழுந்து இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிப்பன்ன, மீகம பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த ஜே. ராஜ்பாய் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர். 

உயிரிழந்த நபர், மீகம - தர்கா நகர் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது, சுடுநீர் கொதிகலனுக்குள் விழுந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இந்தியர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெந்நீர் கொதிகலனில் தவறி வீழ்ந்து இந்திய பிரஜை உயிரிழப்பு. இலங்கையில் சோகம் samugammedia சுடுநீர் கொதிகலனில் தவறி விழுந்து இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெலிப்பன்ன, மீகம பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த ஜே. ராஜ்பாய் (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர். உயிரிழந்த நபர், மீகம - தர்கா நகர் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது, சுடுநீர் கொதிகலனுக்குள் விழுந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், மேலதிக சிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இந்தியர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement