• Sep 21 2024

கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்க இந்திய படையினர் இலங்கை வருகை!

Chithra / Aug 13th 2024, 12:50 pm
image

Advertisement

 

'மித்ரசக்தி' கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியப் படையினர் நேற்று (12) இலங்கை வந்தடைந்தனர்.

இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மென்மேலும் விருத்தி செய்யும் முக்கிய படிமுறையாக, வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகின்ற மித்ரசக்தி போர்ப் பயிற்சி 2024 ஓகஸ்ட் 12 முதல் 25 வரை மாதுரு ஓயா பிரதேசத்தில் நடத்துவதற்குத் எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய இராணுவ வீரர்கள் நேற்று மத்தள விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்தனர்.

இந்திய இராணுவ படையினரை காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, மித்ர சக்தி இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம, இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.

இப்போர்ப் பயிற்சியில் இந்திய இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கேணல் ரவீந்திர அலவட் தலைமையில் 18 அதிகாரிகளும் 102 சிப்பாய்களும் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கஜபா படையணியின் 18 அதிகாரிகளும் 102 சிப்பாய்களும் பங்கேற்கவுள்ளனர்.

 10 வது தடவையாக இம்முறை இடம்பெறும் இந்த இராணுவப் பயிற்சிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இலங்கையிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்டுள்ளன.


கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்க இந்திய படையினர் இலங்கை வருகை  'மித்ரசக்தி' கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியப் படையினர் நேற்று (12) இலங்கை வந்தடைந்தனர்.இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மென்மேலும் விருத்தி செய்யும் முக்கிய படிமுறையாக, வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகின்ற மித்ரசக்தி போர்ப் பயிற்சி 2024 ஓகஸ்ட் 12 முதல் 25 வரை மாதுரு ஓயா பிரதேசத்தில் நடத்துவதற்குத் எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய இராணுவ வீரர்கள் நேற்று மத்தள விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தந்தனர்.இந்திய இராணுவ படையினரை காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, மித்ர சக்தி இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம, இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் வரவேற்றனர்.இப்போர்ப் பயிற்சியில் இந்திய இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கேணல் ரவீந்திர அலவட் தலைமையில் 18 அதிகாரிகளும் 102 சிப்பாய்களும் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கஜபா படையணியின் 18 அதிகாரிகளும் 102 சிப்பாய்களும் பங்கேற்கவுள்ளனர். 10 வது தடவையாக இம்முறை இடம்பெறும் இந்த இராணுவப் பயிற்சிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இலங்கையிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement