• May 10 2024

இஸ்ரேல்- பலஸ்தீன மோதலில் அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்...! மைத்திரி கரிசனை...!samugammedia

Sharmi / Jan 11th 2024, 9:27 am
image

Advertisement

இஸ்ரேல் - பலஸ்தீன மோதலில் அப்பாவி உயிர்கள் பலியாவது தடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில்  அப்பாவி மக்களை பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பல முஸ்லிம் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

பல முஸ்லிம் அமைப்புகள் சுதந்திர சதுக்கத்தில் ஒன்று கூடி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான பைசர் முஸ்தபா, ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இஸ்ரேல்- பலஸ்தீன மோதலில் அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மைத்திரி கரிசனை.samugammedia இஸ்ரேல் - பலஸ்தீன மோதலில் அப்பாவி உயிர்கள் பலியாவது தடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.யுத்தத்தில்  அப்பாவி மக்களை பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பல முஸ்லிம் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.பல முஸ்லிம் அமைப்புகள் சுதந்திர சதுக்கத்தில் ஒன்று கூடி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்களான பைசர் முஸ்தபா, ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement