• May 17 2024

தீவிரமடையும் 'யுக்திய' நடவடிக்கை...! 653 சந்தேக நபர்கள் கைது...!

Sharmi / Feb 29th 2024, 8:16 am
image

Advertisement

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 653 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 530 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 123 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 653 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 136 கிராம் 250 மில்லி கிராம் ஹெராயின், ஐஸ் 86 கிராம் 600 மி.கி, கஞ்சா 05 கிலோ 072 கிராம், மாவா 01கிலோ 496 கிராம், துலே 06 கிராம் 200 மி.கி, மதனமோதக 100 கிராம், 167,369 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 530 சந்தேக நபர்களில் 01 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 04 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



தீவிரமடையும் 'யுக்திய' நடவடிக்கை. 653 சந்தேக நபர்கள் கைது. நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட 'யுக்திய' விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 653 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 530 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 123 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 653 சந்தேக நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது 136 கிராம் 250 மில்லி கிராம் ஹெராயின், ஐஸ் 86 கிராம் 600 மி.கி, கஞ்சா 05 கிலோ 072 கிராம், மாவா 01கிலோ 496 கிராம், துலே 06 கிராம் 200 மி.கி, மதனமோதக 100 கிராம், 167,369 மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.அதேவேளை, போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 530 சந்தேக நபர்களில் 01 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 04 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement