• May 19 2024

33 வருடங்கள் தவறான சிறைவாசம்; தார்மீக சீற்றத்தை ஏற்படுத்தும் சாந்தனின் மரணம்..! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல்

Chithra / Feb 29th 2024, 8:22 am
image

Advertisement


33 வருடங்கள் தவறான சிறைவாசத்திற்குப் பிறகு சாந்தன் காலமானார். அவரது மரணம் பெரும் சோகத்தையும் தார்மீக சீற்றத்தையும் ஏற்படுத்துகிறது என  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரங்கல் செய்தில் மேலும் தெரிவித்ததாவது.

உச்ச நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிட்ட போதிலும், அவர் "சிறப்பு முகாமில்" தடுத்து வைக்கப்பட்டார் - "சிறப்பு முகாமில்" தொடர்ந்து சிறைவாசம் என்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, கொடூரமான மற்றும் சட்டவிரோதமான தண்டனையாகும்.

33 வருடங்களாக சிறையில் இருக்கும் "சிறப்பு முகாம்" கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே நீதிமன்றத்தால்  விடுவிக்கப்பட்டவர்களை "சிறப்பு முகாம்" இல் தடுத்து வைப்பது சட்டவிரோதமான கொடிய தண்டணையாகும். "சிறப்பு முகாம்"கள் உடனடியாக மூடப்படவேண்டும்.

சாந்தனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 

மேலும், அவரை மீண்டும் பார்க்கவும், அணைக்கவும் காத்திருந்த அவரது தாயாருக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு அவரது கரங்களை தோழமை உணர்வுடன் பற்றிக்கொள்கின்றது.  

அவரது மரணத்திற்கு நீதி கோருகிறது. மீதமுள்ள அனைத்து 'சிறப்பு முகாம்' கைதிகளும் மேலும் தாமதங்கள் அல்லது சாட்டுக்கள் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும். என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது


33 வருடங்கள் தவறான சிறைவாசம்; தார்மீக சீற்றத்தை ஏற்படுத்தும் சாந்தனின் மரணம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல் 33 வருடங்கள் தவறான சிறைவாசத்திற்குப் பிறகு சாந்தன் காலமானார். அவரது மரணம் பெரும் சோகத்தையும் தார்மீக சீற்றத்தையும் ஏற்படுத்துகிறது என  நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரங்கல் செய்தில் மேலும் தெரிவித்ததாவது.உச்ச நீதிமன்றம் அவரை விடுவிக்க உத்தரவிட்ட போதிலும், அவர் "சிறப்பு முகாமில்" தடுத்து வைக்கப்பட்டார் - "சிறப்பு முகாமில்" தொடர்ந்து சிறைவாசம் என்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, கொடூரமான மற்றும் சட்டவிரோதமான தண்டனையாகும்.33 வருடங்களாக சிறையில் இருக்கும் "சிறப்பு முகாம்" கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.ஏற்கனவே நீதிமன்றத்தால்  விடுவிக்கப்பட்டவர்களை "சிறப்பு முகாம்" இல் தடுத்து வைப்பது சட்டவிரோதமான கொடிய தண்டணையாகும். "சிறப்பு முகாம்"கள் உடனடியாக மூடப்படவேண்டும்.சாந்தனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், அவரை மீண்டும் பார்க்கவும், அணைக்கவும் காத்திருந்த அவரது தாயாருக்கு மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு அவரது கரங்களை தோழமை உணர்வுடன் பற்றிக்கொள்கின்றது.  அவரது மரணத்திற்கு நீதி கோருகிறது. மீதமுள்ள அனைத்து 'சிறப்பு முகாம்' கைதிகளும் மேலும் தாமதங்கள் அல்லது சாட்டுக்கள் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும். என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement