இலங்கையில் 70 க்கும் மேற்பட்ட விருதுகளோடு “தெற்காசிய நாடுகளில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வாளர்” என்ற சர்வதேச விருது வென்ற மாணவியின் சமூக பணிகளைப் பாராட்டி மேலும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
சம்மாந்துறையை சேர்ந்த ஜலீல் பாத்திமா மின்ஹா (வயது -14) என்ற மாணவியே இவ்வாறு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
மாணவி மின்மினி மின்ஹா சம்மாந்துறை அல்-அர்சத் மஹா வித்தியாலயத்தில் தரம் 09 கல்வி கற்று வருவதுடன் காலநிலை மாற்றங்கள், பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனை எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு உரைகளை நிகழ்த்தி வருபவராவார்.
மேலும் மரங்களை நடும் செயற்திட்டம், கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் வேலைத்திட்டம், ஊனுக்கு உதவுவோம் எனும் செயற்திட்டம், மின்மினி சமூக சேவை அமைப்பு போன்றவைகளின் ஸ்தாபகராக இருந்து வழி நடாத்தி வருகிறார்.
மேலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சுய முயற்சியில் நட்டதோடு இலங்கை தீவில் விழிப்புணர்வு உரையினை இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிகழ்த்தியுள்ளார்.
இலங்கைில் பற்பல அமைப்புகளினால் 75 க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுக் கொண்டதோடு “தெற்காசிய நாடுகளில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வாளர்” என்ற சர்வதேச விருதோடு உலகலாவிய ரீதியில் 20 க்கும் மேற்பட்ட விருதுகளையும் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்ட மிக வயது குறைந்த சிறுமி ஆவார்.
இவரின் இளவயது சுற்று சூழலியல், சமூகப் பணியினைப் பாராட்டியே அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற தமிழ் லெட்டர் ஊடக அமைப்பின் 9 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
70 க்கும் மேற்பட்ட விருதுகளோடு சர்வதேச விருது வென்ற மாணவி; சமூகப் பணிகளை பாராட்டி கௌரவிப்பு இலங்கையில் 70 க்கும் மேற்பட்ட விருதுகளோடு “தெற்காசிய நாடுகளில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வாளர்” என்ற சர்வதேச விருது வென்ற மாணவியின் சமூக பணிகளைப் பாராட்டி மேலும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. சம்மாந்துறையை சேர்ந்த ஜலீல் பாத்திமா மின்ஹா (வயது -14) என்ற மாணவியே இவ்வாறு விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மாணவி மின்மினி மின்ஹா சம்மாந்துறை அல்-அர்சத் மஹா வித்தியாலயத்தில் தரம் 09 கல்வி கற்று வருவதுடன் காலநிலை மாற்றங்கள், பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனை எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு உரைகளை நிகழ்த்தி வருபவராவார்.மேலும் மரங்களை நடும் செயற்திட்டம், கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் வேலைத்திட்டம், ஊனுக்கு உதவுவோம் எனும் செயற்திட்டம், மின்மினி சமூக சேவை அமைப்பு போன்றவைகளின் ஸ்தாபகராக இருந்து வழி நடாத்தி வருகிறார்.மேலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சுய முயற்சியில் நட்டதோடு இலங்கை தீவில் விழிப்புணர்வு உரையினை இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிகழ்த்தியுள்ளார். இலங்கைில் பற்பல அமைப்புகளினால் 75 க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுக் கொண்டதோடு “தெற்காசிய நாடுகளில் மிக வயது குறைந்த சுற்றுச்சூழலியல் விழிப்புணர்வாளர்” என்ற சர்வதேச விருதோடு உலகலாவிய ரீதியில் 20 க்கும் மேற்பட்ட விருதுகளையும் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்ட மிக வயது குறைந்த சிறுமி ஆவார்.இவரின் இளவயது சுற்று சூழலியல், சமூகப் பணியினைப் பாராட்டியே அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற தமிழ் லெட்டர் ஊடக அமைப்பின் 9 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.