• May 06 2024

அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச கடற் புல் தின நிகழ்வு...!

Sharmi / Mar 1st 2024, 4:02 pm
image

Advertisement

சர்வதேச கடற் புல் தினத்தை முன்னிட்டு  பாடசாலை மாணவர்களிடையே இடம்பெற்ற போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மாணவர் மத்தியில் கடற்புல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் யா/ அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியில் தரம் 10,11 இல் நீருயிரின வளத் தொழிநுட்பவியல் பாடம் கற்கும் மாணவரிடையே கடற்புல் தொடர்பான அறிவுக் களஞ்சியப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசில்களும், சான்றிதழும் இன்றையதினம்(01) வழங்கப்பட்டது. 

கல்லூரியின் அதிபரான கு.பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர் எந்திரி ஜீ.தர்சன் கலந்து சிறப்பித்திருந்தார்.

அத்துடன் Clean Ocean Force அமைப்பின் வடமாகாண பிரதிநிதி ம.சசிகரனும், வலிகாமம் கல்வி வலய தொழிநுட்ப பாட ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம் மற்றும் நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரிய ஆலோசகர் விஜயநாதனும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை அராலி இந்துக்கல்லூரி நீருயிரின வளத் தொழிநுட்ப கழகம் ஒழுங்குபடுத்தி நடாத்தியிருந்ததுடன் Clean Ocean Force எனும் அமைப்பு இதற்கான அனுசரணையையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச கடற் புல் தின நிகழ்வு. சர்வதேச கடற் புல் தினத்தை முன்னிட்டு  பாடசாலை மாணவர்களிடையே இடம்பெற்ற போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மாணவர் மத்தியில் கடற்புல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் யா/ அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியில் தரம் 10,11 இல் நீருயிரின வளத் தொழிநுட்பவியல் பாடம் கற்கும் மாணவரிடையே கடற்புல் தொடர்பான அறிவுக் களஞ்சியப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற மாணவருக்கு பரிசில்களும், சான்றிதழும் இன்றையதினம்(01) வழங்கப்பட்டது. கல்லூரியின் அதிபரான கு.பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பிராந்திய பொறியியலாளர் எந்திரி ஜீ.தர்சன் கலந்து சிறப்பித்திருந்தார்.அத்துடன் Clean Ocean Force அமைப்பின் வடமாகாண பிரதிநிதி ம.சசிகரனும், வலிகாமம் கல்வி வலய தொழிநுட்ப பாட ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம் மற்றும் நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரிய ஆலோசகர் விஜயநாதனும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வை அராலி இந்துக்கல்லூரி நீருயிரின வளத் தொழிநுட்ப கழகம் ஒழுங்குபடுத்தி நடாத்தியிருந்ததுடன் Clean Ocean Force எனும் அமைப்பு இதற்கான அனுசரணையையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement