• Jun 22 2025

முல்லைத்தீவில் சர்வதேச யோகா தின நிகழ்வு!

Thansita / Jun 21st 2025, 11:09 am
image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு  முல்லைத்தீவு மாவட்ட செயலகம் , இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து நடாத்தும் சர்வதேச யோகா தினமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று (21.06.2025) காலை 7.30 மணியளவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பிரார்த்தனை அரங்கில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது. 

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு  முல்லைத்தீவு மாவட்ட செயலகம் , இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து கடந்த (15.06.2025) அன்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்திய யோகாப் போட்டியில்  வெற்றியீட்டிய மாணவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், விசேட யோகா ஆற்றுகை , யோகா நெறியினை ஆரம்பித்தல் போன்ற நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.


ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று நிலைகளை பெற்றோருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும், பங்குபற்றியோர், வெற்றியீட்டியோருக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும் பங்குபற்றிய அனைவருக்கும் கலந்து கொண்ட அதிதிகளால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

யோகா, கராத்தே, சிலம்பம், வர்மக்கலை துறைகளினுடைய மாஸ்டர் ஜெயம் ஜெகனின் நெறியாள்கையில் விஷேட யோகா ஆற்றுகை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து மாணவர்களிற்கான யோகா பயிற்சி நடைபெற்றிருந்தது இதனை மாஸ்ரர் ஜெயம் ஜெகன் வழங்கியிருந்தார்.


குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று கோட்ட கல்வி அதிகாரி க.திருக்குமரன், மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.மோகனராசா, பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


முல்லைத்தீவில் சர்வதேச யோகா தின நிகழ்வு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு  முல்லைத்தீவு மாவட்ட செயலகம் , இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து நடாத்தும் சர்வதேச யோகா தினமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று (21.06.2025) காலை 7.30 மணியளவில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பிரார்த்தனை அரங்கில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றிருந்தது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு  முல்லைத்தீவு மாவட்ட செயலகம் , இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து கடந்த (15.06.2025) அன்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடாத்திய யோகாப் போட்டியில்  வெற்றியீட்டிய மாணவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், விசேட யோகா ஆற்றுகை , யோகா நெறியினை ஆரம்பித்தல் போன்ற நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று நிலைகளை பெற்றோருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும், பங்குபற்றியோர், வெற்றியீட்டியோருக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும் பங்குபற்றிய அனைவருக்கும் கலந்து கொண்ட அதிதிகளால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.யோகா, கராத்தே, சிலம்பம், வர்மக்கலை துறைகளினுடைய மாஸ்டர் ஜெயம் ஜெகனின் நெறியாள்கையில் விஷேட யோகா ஆற்றுகை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து மாணவர்களிற்கான யோகா பயிற்சி நடைபெற்றிருந்தது இதனை மாஸ்ரர் ஜெயம் ஜெகன் வழங்கியிருந்தார்.குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், கரைதுறைப்பற்று கோட்ட கல்வி அதிகாரி க.திருக்குமரன், மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.மோகனராசா, பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement