• Sep 20 2024

காணாமல் போன பற்றிய அலுவலகத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 243 பேரிடம் விசாரணை...!

Sharmi / Aug 14th 2024, 3:20 pm
image

Advertisement

காணாமல் போன பற்றிய அலுவலகத்தினால்(omp) கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 243 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டது. 

நேற்றைய தினம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 128 பேரிடமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 17 பேரிடமும் விசாரணை மேற்கொண்டிருந்தது. 

இன்றைய தினம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 50 பேரிடமும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 48 பேரிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. 

கண்டாவளை பிரதேச செயலகத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஸ் கட்டுலந்த தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


காணாமல் போன பற்றிய அலுவலகத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 243 பேரிடம் விசாரணை. காணாமல் போன பற்றிய அலுவலகத்தினால்(omp) கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 243 பேரிடம்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 243 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டது. நேற்றைய தினம் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 128 பேரிடமும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 17 பேரிடமும் விசாரணை மேற்கொண்டிருந்தது. இன்றைய தினம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 50 பேரிடமும், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 48 பேரிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. கண்டாவளை பிரதேச செயலகத்தில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் மகேஸ் கட்டுலந்த தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement