• Sep 17 2024

தம்பலகாமத்தில் ஓ.எம்.பி அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுப்பு..!

Sharmi / Aug 22nd 2024, 1:52 pm
image

Advertisement

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஊடாக தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் சாட்சியமளிப்பு நிகழ்வு இன்றையதினம்(22) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் தம்பலகாமம், கிண்ணியா, கந்தளாய், திருகோணமலை பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். 

முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டும் காணாமல் போனவர்களின் உறவுகள் சாட்சியமளிக்க தவறியவர்கள் இன்று சாட்சியமளித்தனர். இதில் மொத்தமாக 31 உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சாட்சியமளிப்பு நிகழ்வில், காணாமல் போனோர் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள், தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



தம்பலகாமத்தில் ஓ.எம்.பி அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுப்பு. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் ஊடாக தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் சாட்சியமளிப்பு நிகழ்வு இன்றையதினம்(22) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.இதில் தம்பலகாமம், கிண்ணியா, கந்தளாய், திருகோணமலை பட்டினமும் சூழலும் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டும் காணாமல் போனவர்களின் உறவுகள் சாட்சியமளிக்க தவறியவர்கள் இன்று சாட்சியமளித்தனர். இதில் மொத்தமாக 31 உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.சாட்சியமளிப்பு நிகழ்வில், காணாமல் போனோர் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள், தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement