• Jul 05 2025

ஜனாதிபதி நிதியத்திற்கு IOC நிறுவனத்தால் 100 மில்லியன் ரூபா நன்கொடை!

shanuja / Jul 4th 2025, 6:23 pm
image

 ஜனாதிபதி நிதியத்திற்கு IOC  நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.


IOC  நிறுவனத்தின்  முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார்.


இந்த நன்கொடை, இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.


நன்கொடை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி நிதியத்திற்கு IOC நிறுவனத்தால் 100 மில்லியன் ரூபா நன்கொடை  ஜனாதிபதி நிதியத்திற்கு IOC  நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது.IOC  நிறுவனத்தின்  முகாமைத்துவப் பணிப்பாளர் தீபக் தாஸ், இதற்கான காசோலையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார்.இந்த நன்கொடை, இலங்கையின் கல்வி, சுகாதாரம் மற்றும் கலாசார துறைகளுக்கு வழங்கும் நன்கொடைகளுக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.நன்கொடை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement