2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் இறுதிப் போட்டியின் தெரிவில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன.
அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2 ஆவது தகுதிகாண் சுற்றில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்- ஹார்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி 2 ஆவது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
ஐ.பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமானது. முதலாவது தகுதிச்சுற்றில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நேற்றுமுன்தினம்(30) நடந்த எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
இந்த நிலையில், இன்று நடைபெறும் சுற்றில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணி எது என்பது தெரிவாகும்.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டிக்கு மோதப் போவது பஞ்சாப் அணியா, மும்பை அணியா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல் இறுதிப்போட்டி தெரிவு ; மும்பை - பஞ்சாப் இன்று மோதல். 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் இறுதிப் போட்டியின் தெரிவில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2 ஆவது தகுதிகாண் சுற்றில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்- ஹார்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.இதில் வெற்றி பெறும் அணி 2 ஆவது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ஐ.பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமானது. முதலாவது தகுதிச்சுற்றில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்றுமுன்தினம்(30) நடந்த எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.இந்த நிலையில், இன்று நடைபெறும் சுற்றில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணி எது என்பது தெரிவாகும். ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டிக்கு மோதப் போவது பஞ்சாப் அணியா, மும்பை அணியா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.