• Jul 14 2026

ஈரான் தாக்குதல்: கட்டார், ஓமான், ஜோர்தானில் அமெரிக்க தளங்கள் இலக்கு – வளைகுடா நாடுகளில் பாதுகாப்பு எச்சரிக்கை

Chithra / Jul 12th 2026, 4:34 pm
image


அமெரிக்காவின் அண்மைய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, கட்டாரில் அமைந்துள்ள அல்-உடைட் (Al Udeid) அமெரிக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

 

இந்தத் தாக்குதலில், தமது போர் விமானங்கள் மூலம் பராமரிப்பு நிலையம் மற்றும் கட்டளை, கட்டுப்பாட்டு மையம் ஆகியவை அழிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.


அதேவேளை, ஓமானிலுள்ள அமெரிக்க கடற்படை வழங்கல் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதற்கிடையில், ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தமது வான்பாதுகாப்பு அமைப்புகள் மூலம் வெற்றிகரமாக முறியடித்து வருவதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அறிவித்துள்ளது.


பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்டார் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, மக்கள் தங்களது வீடுகளிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ தங்கியிருக்குமாறும், உத்தியோகபூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.


இதனிடையே, பஹ்ரைனில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு அந்நாட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.


மேலும், அமெரிக்க தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஜோர்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளமும் தாக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. பிரின்ஸ் ஹசன் வான்படைத் தளத்தில் அமைந்திருந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் MQ-9 ட்ரோன் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையங்கள் தாக்குதலில் அழிக்கப்பட்டதாகவும் ஈரான் கூறியுள்ளது.


எனினும், ஈரான் வெளியிட்டுள்ள இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா அல்லது சம்பந்தப்பட்ட நாடுகள் இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலை வெளியிடவில்லை.

 

ஈரான் தாக்குதல்: கட்டார், ஓமான், ஜோர்தானில் அமெரிக்க தளங்கள் இலக்கு – வளைகுடா நாடுகளில் பாதுகாப்பு எச்சரிக்கை அமெரிக்காவின் அண்மைய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, கட்டாரில் அமைந்துள்ள அல்-உடைட் (Al Udeid) அமெரிக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில், தமது போர் விமானங்கள் மூலம் பராமரிப்பு நிலையம் மற்றும் கட்டளை, கட்டுப்பாட்டு மையம் ஆகியவை அழிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.அதேவேளை, ஓமானிலுள்ள அமெரிக்க கடற்படை வழங்கல் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கிடையில், ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தமது வான்பாதுகாப்பு அமைப்புகள் மூலம் வெற்றிகரமாக முறியடித்து வருவதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அறிவித்துள்ளது.பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்டார் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, மக்கள் தங்களது வீடுகளிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ தங்கியிருக்குமாறும், உத்தியோகபூர்வ பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.இதனிடையே, பஹ்ரைனில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு அந்நாட்டு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.மேலும், அமெரிக்க தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஜோர்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளமும் தாக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. பிரின்ஸ் ஹசன் வான்படைத் தளத்தில் அமைந்திருந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் MQ-9 ட்ரோன் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையங்கள் தாக்குதலில் அழிக்கப்பட்டதாகவும் ஈரான் கூறியுள்ளது.எனினும், ஈரான் வெளியிட்டுள்ள இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக அமெரிக்கா அல்லது சம்பந்தப்பட்ட நாடுகள் இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலை வெளியிடவில்லை. 

Advertisement

Advertisement

Advertisement