• Sep 20 2024

இலங்கையில் மசாஜ் நிலையம் சென்ற ஈரானிய யுவதிக்கு நேர்ந்த விபரீதம்! - சந்தேகநபர் உடனடிக் கைது

Chithra / Jun 10th 2024, 10:15 am
image

Advertisement

 

 

கேகாலை, ரம்புக்கன வீதியிலுள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் வைத்து ஈரானிய யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

24 வயதான  ஈரானிய பெண்  மசாஜ் செய்வதற்காக ரந்தெனியவில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்திற்கு பல ஈரானியர்களுடன் சென்றுள்ளார்.

அதன்போது, பெண்ணை மசாஜ் அறைக்குள் வரவழைத்த சந்தேகநபர், மசாஜ் செய்வதாக கூறி பெண்ணை தவறான முறைக்குட்படுத்தியுள்ளதாக கேகாலை பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில், கேகாலை ரன்தெனிய மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் சந்தேகநபர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 

இலங்கையில் மசாஜ் நிலையம் சென்ற ஈரானிய யுவதிக்கு நேர்ந்த விபரீதம் - சந்தேகநபர் உடனடிக் கைது   கேகாலை, ரம்புக்கன வீதியிலுள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் வைத்து ஈரானிய யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.24 வயதான  ஈரானிய பெண்  மசாஜ் செய்வதற்காக ரந்தெனியவில் உள்ள ஆயுர்வேத மசாஜ் மையத்திற்கு பல ஈரானியர்களுடன் சென்றுள்ளார்.அதன்போது, பெண்ணை மசாஜ் அறைக்குள் வரவழைத்த சந்தேகநபர், மசாஜ் செய்வதாக கூறி பெண்ணை தவறான முறைக்குட்படுத்தியுள்ளதாக கேகாலை பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.இந் நிலையில், கேகாலை ரன்தெனிய மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் சந்தேகநபர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படுள்ளார்.சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement