• Apr 15 2026

துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிறுவன் போதைக்கு அடிமையானவரா? பொலிஸாரின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்

Chithra / Feb 11th 2026, 10:36 am
image


யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் இறந்த சந்தேக நபர் ஐஸ் மற்றும் ஹெரோயின் பயன்படுத்தியதாக உடற்கூற்று பரிசோதனைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் நேற்று அதிகாலை ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  பொலிஸாரின் கட்டளைகளை மீறி பயணித்ததால் இந்த துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் இன்றையதினம் பொலிஸ் ஊடகப் பிரிவானது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியமா விடயங்கள்,


இறந்த சந்தேக நபர் ஐஸ் மற்றும் ஹெரோயின் பயன்படுத்தியதாக உடற்கூற்று பரிசோதனைகளின்போது தெரியவந்ததாக அரசு மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.


வாகனத்தில் இருந்த மற்ற இரண்டு சந்தேக நபர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் மேலும் ஒரு சந்தேக நபர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்த வாகனம் டால்பின் ரக வேன் ஆகும். பின் இருக்கை அகற்றப்பட்டிருந்ததால், குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் (SOCO) உதவியுடன் வாகனத்தை சோதனை செய்தபோது 17 கிராம் 500 மில்லிகிராம் கஞ்சா, ஒரு வாள், ஒரு கத்தி, ஒரு கயிறு மற்றும் சாணம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.


குற்றம் நடந்த இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வேன், ஊர்காவற்றுறை பகுதியில் கால்நடை திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட அதே வாகனமா அல்லது அது வேறு குற்றங்களில் ஈடுபட்ட வாகனமா என்பதை அறிய, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையமும் யாழ்ப்பாணப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகமும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன  என பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிறுவன் போதைக்கு அடிமையானவரா பொலிஸாரின் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டில் இறந்த சந்தேக நபர் ஐஸ் மற்றும் ஹெரோயின் பயன்படுத்தியதாக உடற்கூற்று பரிசோதனைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் நேற்று அதிகாலை ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  பொலிஸாரின் கட்டளைகளை மீறி பயணித்ததால் இந்த துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்றையதினம் பொலிஸ் ஊடகப் பிரிவானது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கியமா விடயங்கள்,இறந்த சந்தேக நபர் ஐஸ் மற்றும் ஹெரோயின் பயன்படுத்தியதாக உடற்கூற்று பரிசோதனைகளின்போது தெரியவந்ததாக அரசு மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.வாகனத்தில் இருந்த மற்ற இரண்டு சந்தேக நபர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் மேலும் ஒரு சந்தேக நபர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த வாகனம் டால்பின் ரக வேன் ஆகும். பின் இருக்கை அகற்றப்பட்டிருந்ததால், குற்றப் புலனாய்வு அதிகாரிகளின் (SOCO) உதவியுடன் வாகனத்தை சோதனை செய்தபோது 17 கிராம் 500 மில்லிகிராம் கஞ்சா, ஒரு வாள், ஒரு கத்தி, ஒரு கயிறு மற்றும் சாணம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.குற்றம் நடந்த இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற வேன், ஊர்காவற்றுறை பகுதியில் கால்நடை திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட அதே வாகனமா அல்லது அது வேறு குற்றங்களில் ஈடுபட்ட வாகனமா என்பதை அறிய, ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையமும் யாழ்ப்பாணப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகமும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன  என பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement