• Jun 10 2025

காசாவிற்குச் சென்ற உதவிப்படகை நிறுத்திய இஸ்ரேல்; பயணித்தவர்களும் கைது..!

shanuja / Jun 9th 2025, 10:26 am
image

காசாவிற்குச் சென்ற உதவிப்படகை நிறுத்தி இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதுடன் அதில் பயணித்த கிரேட்டா துன்பெர்க் மற்றும் பிற ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று   இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகவும் கொடிய மற்றும் அழிவுகரமான ஒன்றாகக் கருதப்படும் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் பலர் உயிரிழந்துள்ளதுடன் உணவு, நீர் இன்றி பசி, பஞ்சத்தாலும் பலர் உயிரிழந்துள்ளனர். 


இஸ்ரேலின் தொடர் தாக்குதல் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களின் பிரதேசத்தை பஞ்சத்திற்கு ஆளாக்கியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில்  

இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையையும், மனிதாபிமான உதவிகள் நுழைவதில் அதன் கட்டுப்பாடுகளையும் எதிர்த்து பாலஸ்தீனியர்களுக்கு உதவுவதற்காக பல ஆர்வலர்கள் காசாவிற்குச் செல்லத் தயாராகினர்.  


இதன் ஒரு கட்டமாகத் தான் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட  உதவிக் கப்பலான மேட்லீன் காசாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.   


கிரெட்டா துன்பெர்க் உட்பட 12 ஆர்வலர்கள் காசாவுக்குப் பயணித்துக் கொண்டிருந்த  உதவிப் படகை  இஸ்ரேலியப் படைகள் நிறுத்தியதுடன், அதில் பயணித்தவர்களும் இன்று கைது செய்யப்பட்டனர் என்று இஸ்ரேல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


இதற்கிடையே பயணத்தை ஏற்பாடு செய்த சுதந்திர புளோட்டிலா கூட்டணி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ஆர்வலர்கள் பிரதேசத்திற்கு மிகவும் தேவையான உதவிகளை வழங்க முயன்றபோது "இஸ்ரேலியப் படைகளால் கடத்தப்பட்டனர்"  


"கப்பல் சட்டவிரோதமாக ஏற்றப்பட்டது, அதன் நிராயுதபாணியான பொதுமக்கள் குழுவினர் கடத்தப்பட்டனர், மேலும் அதன் உயிர்காக்கும் சரக்குகள் - குழந்தை பால்மா, உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உட்பட - பறிமுதல் செய்யப்பட்டன." - என்று  தெரிவித்துள்ளது.

காசாவிற்குச் சென்ற உதவிப்படகை நிறுத்திய இஸ்ரேல்; பயணித்தவர்களும் கைது. காசாவிற்குச் சென்ற உதவிப்படகை நிறுத்தி இஸ்ரேலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதுடன் அதில் பயணித்த கிரேட்டா துன்பெர்க் மற்றும் பிற ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று   இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மிகவும் கொடிய மற்றும் அழிவுகரமான ஒன்றாகக் கருதப்படும் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் பலர் உயிரிழந்துள்ளதுடன் உணவு, நீர் இன்றி பசி, பஞ்சத்தாலும் பலர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் தொடர் தாக்குதல் சுமார் 2 மில்லியன் பாலஸ்தீனியர்களின் பிரதேசத்தை பஞ்சத்திற்கு ஆளாக்கியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில்  இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையையும், மனிதாபிமான உதவிகள் நுழைவதில் அதன் கட்டுப்பாடுகளையும் எதிர்த்து பாலஸ்தீனியர்களுக்கு உதவுவதற்காக பல ஆர்வலர்கள் காசாவிற்குச் செல்லத் தயாராகினர்.  இதன் ஒரு கட்டமாகத் தான் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட  உதவிக் கப்பலான மேட்லீன் காசாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.   கிரெட்டா துன்பெர்க் உட்பட 12 ஆர்வலர்கள் காசாவுக்குப் பயணித்துக் கொண்டிருந்த  உதவிப் படகை  இஸ்ரேலியப் படைகள் நிறுத்தியதுடன், அதில் பயணித்தவர்களும் இன்று கைது செய்யப்பட்டனர் என்று இஸ்ரேல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே பயணத்தை ஏற்பாடு செய்த சுதந்திர புளோட்டிலா கூட்டணி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ஆர்வலர்கள் பிரதேசத்திற்கு மிகவும் தேவையான உதவிகளை வழங்க முயன்றபோது "இஸ்ரேலியப் படைகளால் கடத்தப்பட்டனர்"  "கப்பல் சட்டவிரோதமாக ஏற்றப்பட்டது, அதன் நிராயுதபாணியான பொதுமக்கள் குழுவினர் கடத்தப்பட்டனர், மேலும் அதன் உயிர்காக்கும் சரக்குகள் - குழந்தை பால்மா, உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உட்பட - பறிமுதல் செய்யப்பட்டன." - என்று  தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement